ஈரானுக்கு இஸ்ரேல் பதிலடி
இஸ்ரேல், ஈரான் மீது எறிகணைத் தாக்குதல் நடத்தியுள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனையடுத்து, ஈரானின் வான்பாதுகாப்பு அமைப்பு செயற்படுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரச ஊடகமான ஐ.ஆர்.என்.ஏ தெரிவித்துள்ளது.
எறிகணைத் தாக்குதல் காரணமாக உடனடியாக விமான சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அண்மையில் ஈரான், இஸ்ரேல் மீது தாக்குதலை நடத்திய நிலையில் அதற்கு இஸ்ரேல் உரிய வகையில் பதில் வழங்கும் என அறிவித்திருந்தது.
இதனடிப்படையில், குறித்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், ஈரானில் உள்ள அணுசக்தி நிலையத்திற்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என சர்வதேச தகவல்கள் குறிப்பிடுகின்றன.